ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு முன்னதாகவே கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வரு கின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக ஜார்க்கண்டில் பழங்குடி மக்களிடையே மத மோதலை தூண்ட தீவிரமாக இறங்கி யுள்ளது.
திணறும் பாஜக
நாட்டிலேயே அதிக பழங்குடியினர் வாழும் மாநிலமான ஜார்க்கண்டில் ஜேஎம்எம் - காங்கி ரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலை யில், முதல்வராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளார். ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்திலும், மக்களவை தேர்த லில் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாதபடி தடுக்க வும் அமலாக்கத்துறை மூலம் ஹேமந்த் சோர னை கடந்த ஜனவரி மாதம் சிறையில் அடைத்தது மோடி அரசு. ஆனால் ஹேமந்த் சோரன் ஜேஎம் எம் மூத்த தலைவர் சம்பாய் சோரனை முதல்வர் இருக்கையில் அமர வைத்து, ஆட்சியைக் காப்பாற்றி சிறைக்குச் சென்றார். ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்தே வரவிருக்கும் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என மோடி அரசு கணக்குப் போட்டது. ஆனால் கடந்த ஜூன் மாத இறுதியில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஹேமந்த் சோர னுக்கு ஜாமீன் வழங்கியது. ஹேமந்த் சோர னுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பாஜக, முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சம்பாய் சோரனை தங்கள் பக்கம் வளைத்தது. எம்எல்ஏக்கள், பெரும் தொண்டர் களுடன் அவர் வருவார் என பாஜக எதிர்பார்த்தது. ஆனால் சம்பாய் சோரன் “சிங்கம் எப்பொழு தும் சிங்கிளா தான் வரும்” என்பதை போல தனியாக பாஜகவில் இணைந்தார். இதனால் அதிருப்தி அடைந்த பாஜக சட்டமன்ற தேர்தல் தோல்வி பயத்தால், பழங்குடி மக்களிடையே மத மோதலை தூண்டத் தீவிரமாக இறங்கி யுள்ளது.
“வனவாசி” பிரச்சாரம்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பழங்குடியின பிரி வான அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆசி ரமம் சத்தீஸ்கர் மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. ஆர்எஸ்எஸ் - பாஜகவின் பழங்குடியின பிரிவான இந்த பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமம், “இந்து பழங்குடியினர் மட்டும்தான் உண்மையான பழங்குடியினர். கிறிஸ்தவ பழங்குடியினர் போலியானவர்கள். அதனால் பழங்குடியினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்து பழங்குடியினரான வனவாசிகளே இனிமேல் ஜார்க்கண்டின் பழங்குடியின மக்கள்” என அறிவித்து மாநிலம் முழுவதும் போராட்டத்தை நடத்தி வருகிறது. சில இடங்களில் கிறிஸ்தவ பழங்குடியினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சா ரத்தையும் பாஜக அரங்கேற்றி வருகிறது. இத னால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒரு சில இடங்களில் வன்முறை பதற்றம் கிளம்பி யுள்ளது.
பாஜகவின் கணக்கு பலிக்க வாய்ப்பில்லை
பாஜகவின் அரசியல் ஆதாயக் கணக்கு களை முன்கூட்டியே உணர்ந்த ஹேமந்த் சோரன் கடந்த 2021ஆம் ஆண்டே, “பழங்குடி யினர் இந்துக்கள் அல்ல. பழங்குடியினர் எந்த வொரு ஒழுங்கமைக்கப்பட்ட மதத்திற்கும் எதி ரானவர்கள்” என்ற பிரச்சாரத்தை தொடங்கிவிட் டார். மேலும் அதே ஆண்டு ஜார்க்கண்ட் சட்ட மன்றத்தில் “சர்னா குறியீடு” தொடர்பாக சட்டம ன்றத்தில் தீர்மானம் ஒன்றை ஹேமந்த் சோரன் நிறைவேற்றினார். இந்த தீர்மானம் பழங்குடி யினரின் பாதுகாப்பு மற்றும் பழக்கவழக்கங் களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறது என்ற நிலையில், பாஜக - ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வை இந்த தீர்மானத்தை ஒப்புக்கொள்ள வில்லை. அதேபோல இந்த தீர்மானத்திற்கு ஒன்றிய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்க வில்லை. பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் “சர்னா குறியீடு” தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காத ஒன்றிய பாஜக அரசு, இந்துக்கள் தான் உண்மையான பழங்குடியினர் எனக் கூறி, ஜார்க்கண்டில் பழங்குடி மக்களி டையே மத மோதலை தூண்ட பாஜக முயற்சிக் கிறது என ஜேஎம்எம் கட்சி பதிலடி பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. ஜேஎம்எம் கட்சியின் பதி லடியால் அதிர்ச்சியில் உறைந்துள்ள பாஜக, ஜம்மு- காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா போல ஜார்க்கண்டிலும் அடி மேல் அடி வாங்கி வருகிறது.
மக்களவை தேர்தலிலேயே பாஜகவிற்கு மோசமான அடி
ஜார்க்கண்டில் மக்களவை தேர்தலின் பொழுதே பாஜக “வனவாசி” பிரச்சாரத்தை பயன்படுத்தியது. இதனால் அம்மாநிலத்தில் பழங்குடியினருக்கு என ஒதுக்கப்பட்டிருந்த 4 தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைந்தி ருந்தது. இது சட்டமன்ற தேர்தலிலும் பிரதி பலிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறு கின்றனர்.
“சர்னா மதக் குறியீடு” தீர்மானம்
இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் உள்ளிட்ட மதங்களை பின்பற்றாமல், இயற்கையை வழிபடும் பழங்குடியினருக்கு “சர்னா மதக் குறியீடு” வழங்கப்படுகிறது. அதாவது பாரம்பரிய மத இருப்பை பாதுகாப்பதே “சர்னா மதக் குறியீட்டின்” முக்கிய அம்சமாகும். பொது சிவில் சட்டம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட காலமான கடந்த 2021இல் பாஜகவின் அரசியல் ஆதாயத்தை முன்கூட்டியே கணித்து, பழங்குடியினருக்கு “சர்னா மதக் குறியீட்டை” வழங்கி, “சர்னா”வை தனி மதமாக சேர்க்கும் தீர்மானத்தை ஜார்க்கண்ட் சட்டமன்றம் நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.